இடுகைகள்

2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சாண்டில்யன்

படம்
சாண்டில்யன் கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து. சாண்டில்யன் (1910-1987) பிரபலமான தமிழ் எழுத்தாளர். இவர் வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட புதினங்கள் எழுதிய எழுத்தாளர்களுள் ஒருவர். இவரது புதினங்கள் இதழ்களில் தொடர்களாக வெளிவந்துள்ளன. இளமைப்பருவம்  பாஷ்யம் அய்யங்கார் என்ற இயற்பெயர் கொண்ட சாண்டில்யன் தமிழ்நாட்டில் உள்ள திருக்கோவிலூரில் நவம்பர் 10, 1910ம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர்- ராமனுஜம் அய்யங்கார் மற்றும் பூங்கோவில்வல்லி. சென்னையில் உள்ள பச்சையப்பா மற்றும் நேஷனல் மாடல் பள்ளிகளில்பயின்றார். திருச்சி சி. ராஜகோபாலாச்சாரியின் தாக்கத்தால் இந்திய சுதந்திர போரட்டத்தில் இணைந்து இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினரானார். 1929இல் ரங்கநாயகியை மணந்தார். செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் பட்டம்பெற்றார். கல்லூரியில் இருந்தபோது தொழில் வாழ்க்கை கல்லூரி படிப்பை முடித்தபின் 1930களில் சென்னை தி.நகரில் குடியேறினார்.அருகாமையில் வசித்த பிரபல எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி திரு. வி. க நடத்திய வார இதழ்

தைப்பொங்கல்

படம்
தைப்பொங்கல் பொங்கல் அன்று சுப நேரம்   http://www.tamildailycalendar.com/ இலிருந்து கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.   தைப்பொங்கல் தை 1 அன்று தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழ்நாடு , இலங்கை , மலேசியா , சிங்கப்பூர் , ஐரோப்பிய நாடுகள் , வட அமெரிக்கா , தென் ஆபிரிக்கா , மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இவ்விழா சமயங்கள் கடந்து அனேக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக கொண்டாடப்படுகிறது. தைப்பொங்கல் வரலாறு சங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் தினத்தில் இந்த விரதத்தை முடிப்பார்கள். நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி , சூரியன் , உதவிய மாடு போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர். இதுவே நாளடைவில் மூன்று தினங்கள் கொண்டாடும் பொங்கல் திருநாள் கொண்டாட்டமாக மாறியது. உழவர் திருநாள் பொங்கல்

வேதம்

கீழே  * வேதம் ரிக் வேதம் யசுர் வேதம்   ** கிருஷ்ண யசுர்வேதம்              * தைத்திரீய சம்ஹிதை              * மைத்திராயனீ சம்ஹிதை              * சரக-கதா சம்ஹிதை              * கபிஸ்தல-கதா சம்ஹிதை   ** சுக்கில யசுர்வேதம்                வஜசனேயி மாத்தியந்தினியம்              வஜசனேயி கான்வம் சாம வேதம் அதர்வண வேதம்   * தமிழரின் வாழ்வில் வேதம் திருமுறைகளின் பங்கு ( குமரகுருபரர் இதழ் ) * வேதம் - ஆராய்ச்சி உள்ளடங்கி உள்ளன . முழுவதும் படயுங்களேன்.......... கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து. வேதம் வேதங்கள் என்பவை பொதுவாக இன்று இந்து சமயம் என்று அறியப்படும் சமயத்திலுள்ள அடிப்படையான நூல்களில் சிலவாகும். காலத்தால் முற்பட்டதும் ஆகும். வேதம் என்னும் சொல் பிற மதத்தாரும் தங்கள் சமயத்தின் முதன்மையான நூல்களுக்குப் பயன்படுத்துகின்றனர். இந்து மதத்தில், வேதம் என்ற சொல் வித் என்ற வடமொழிச் சொல்லை வேராகக் கொண்டது. வித் என்றால் அறிதல் என்று பொருள். இந்து சமயத்துக்கு அடிப்படையானவை நான்கு வேதங்கள் ஆகும். இவை தமிழில் நான்மறை என்றும் கூறப்படும். என்றாலும் தமிழில் நான்மறை என்பன வ