விஞ்ஞான சோசலிசத்தின் தந்தை - கார்ல்மார்க்ஸ்
கார்ல் மார்க்ஸ் “விஞ்ஞான சோசலிசத்தின் தந்தை” என போற்றப்படும் இவரது வாழ்க்கைக்காலம் 1818 முதல் 1883 எனப்படுகின்றது. கார்ல்மார்க்சினுடைய “மூலதனம்” என்ற நூல் வெகுவாக பேசப்பட்ட ஒரு நூலாகும். இதைவிட அவரது “திருக்குடும்பம்” எனப்படும் “Holy family” என்ற 1844 இல் எழுந்த நூலும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். தொழிலாளி முதலாளி வர்க்கத்தின் நவீன முறன்பாட்டினை சித்திகரிக்கும் “Manifesto of the commiuist party” என்ற 1848 இல் உருவான நூல் சமூக புரட்சியின் முழுமையான கோட்பாடாகவும் அதற்கான தந்திரோபாயமாகவும்... முதன் முதலில் எழுந்த நூலாக கருதப்படுகின்றது. இவற்றை விட 1847 இல் எழுதப்பட்ட “வறுமையின் மெய்யியல்” எனப்படும் “Poverty of Philosophy” என்ற நூலும் கார்ல்மார்க்சின் சோசலிச கனவிற்கு வலுச்சேர்த்த அரிய படைப்புக்களாகும். மார்க்சின் வரலாற்றுப் படிநிலைக் கோட்பாடு பொருளினை அடிப்படையாக கொண்டு பிரிக்கப்பட்டது. அந்தவகையில் மனித வரலாற்றினை மார்க்ஸ் ஐந்து காலகட்டங்களாக பிரிப்பார். மிகவும் தொன்மையான, பின்தங்கிய நுகர்விற்காக மட்டுமே உற்பத்தி என்றிருந்த ஆதி சமூகத்தை மார்க்ஸ் ஆதி பொதுவுடமைச் சமூகம் என்கிறார். பின்னர்